29/7/11

வாதிகில்தியில் தவறவிட்ட காமசிலுவைகள்


யாசகத்தின் கடைசியில்
ஊர்ந்து மேலேறின
என் காமசிலுவைகள்

துரோக நாடகத்தின்
திரைசீலை விலகியது

முலைக்காம்புகளால்
என் நெஞ்சத்துரோமத்தில்
நீ வரைந்த காதல் ஓவியத்திலிருந்து
நிழலும் நிர்வாணமும் வெளியேறின.

ரெபோக்காள் தோட்டத்து மலர்களைப் போல
நீ பூத்திருந்த காலையில்
வெறுங்கையுடன் என்னை வெளியேற்றினாய் 

வாதிகில்தியின் நீர்வற்றிய படுக்கைகளில்
போக்கிடமற்ற என் பயணம்

உன் கவண்கல்
என் காலடியில் சிரித்தது
கோலியாத்தின் அலறல்
தேய்பிறையாகிக்கொண்டிருந்தது

சவஊர்வலத்து பாடல்வரிகளில்
நீ உதிர்த்த வார்த்தைகளின் நடனம்

உன் கண்களில் தேங்கிய
ஜென்மப்பகையின் காதல்

அங்க அசைவுகளில்
சங்கேதபாஷைகளின் கொக்கிகள்

உறங்கிவிட்ட கனவை
மறுபடியும் தாலாட்டுகிறாய்

பாரோனின் இரவுக்காவலர்கள்
நம் காதலை நமக்கு பாடுகிறார்கள்

உன் கூந்தலில் புரண்டெழ
என் விரல்கள் காதல் கொள்கின்றன


கோலியாத்தின் வெட்டப்பட்ட நாவில்
மறைந்தன ரத்தசுவடுகள்

காலம் நிறம் மாற்றிக்கொண்டிருந்தது.
காதல்
பெருவெள்ளத்தைப்போல பின்தொடர்கிறது

முஷ்டிமைதுனத்தின் கடைசியில்
நீ வெளியேறினாய்
விடைபெறாமலே நானும்.

0 comments:

கருத்துரையிடுக