31/12/12

ஜெயமோகன் ஆஸ்ரம குழந்தை தொழிலாளர்


உற்பத்திக்கும் எழுத்திற்கும் இடையில் இலக்கியவாதி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறான். பாரிய அரசியலில் நுழைந்தவன் எழுத்திற்கு திரும்புவதில்லை. இலக்கிய பரிச்சையத்தை வைத்து வினவு பாணியில் கட்டுரை மட்டுமே எழுத முடியும். ஒரு கதையோ கவிதையோ எழுத குறைந்த பட்சம் மூன்று நாட்கள் சாதாரணமாக தேவைப்படுகிறது. உற்பத்தியாளர்களை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.  லௌகீக வாழ்விற்கான பொருளீட்டுவதில் தொலைந்துவிடும் கால அளவு. இலக்கியவாதிகள் கட்டுரை எழுத துவங்கிவிட்டால் அப்பாதிப்பு படைப்பிலும் தலைகாட்டிவிடும். புறக்கணிப்பின் அவஸ்த்தையில் குழுக்களுக்குள் சிக்கிகொள்வதும் கட்சிக்கு வாழ்த்துபா எழுதுவதும் ஆளுமைகளுக்கு வாரிசாக அறிவிக்க கோரி ரகசிய கடிதங்கள் எழுதுவதும் சொந்த சாதிக்கு திரும்புவதும் பல விஷயங்களை நான் இங்கே முன்வைக்க முடியும். இதில் இலக்கியத்தில் இயங்குபவன் எப்படி ஆபத்தானவனாக மாறுகிறான்? பாலா தெளிவுபடுத்த வேண்டும். இலக்கியவாதி என்று யாரை கருதுகிறீர்கள்? பெரும்பத்திரிகைகளை நோக்கி தரை நீச்சல் அடிக்கும் பெரும் கவிஞர்களையா? வறட்டு இருமல்வாதிகளையா? ஜெயமோகன் ஆஸ்ரம குழந்தை தொழிலாளர்களையா?

0 comments:

கருத்துரையிடுக